அண்மை செய்தி தாயகச் செய்தி 

வடக்கில் முன்மாதிரியாக மாறிய சாரதி, நடத்துநர் – நேர்மைக்கு கௌரவிப்பு

பயணி ஒருவர் தவறிவிட்டுச் சென்ற பெறுமதியான நகை மற்றும் பணத்தை, நேர்மையுடன் உரியவரிடம் ஒப்படைத்த பேருந்துச் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோருக்குப் வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையினல் பாராட்டுக்களும் கெளரவிப்பும் வழங்கப்பட்டுள்ளது.

​ கொடிகாமத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பேருந்தில் பயணித்த நபர் ஒருவர், தனது பெறுமதியான நகை மற்றும் பணப்பையைத் தவறுதலாகப் பேருந்திலேயே விட்டுச் சென்றுள்ளார்.

இதனை அவதானித்த குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரான மகேந்திரன் கோகுலதீபன் மற்றும் L. ஜனார்த்தனன் ஆகியோர், அந்தப் பொருட்களைப் பாதுகாப்பாக மீட்டெடுத்து, சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் கண்டு, உடனடியாக அவரிடம் ஒப்படைத்தனர்.

​இவர்களின் இந்த உன்னதமான மனிதாபிமானச் செயற்பாட்டைக் கௌரவிக்கும் வகையில், வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் ஏற்பாட்டில், அதன் தலைவர் பொறியளாலர் விமலேஸ்வரன் தலைமையில் கௌரவிப்பு நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

​வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில்,

நேர்மையாகச் செயற்பட்ட சாரதி மற்றும் நடத்துனருக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டதோடு, அன்பளிப்பாக சிறிய பணப்பரிசும் வழங்கப்பட்டது.

அன்மைச் செய்தி

Leave a Comment